பங்களாதேஷின் சில பகுதிகளில் பெரும் வகுப்புவாத மோதல்கள் பதிவாகி சில மாதங்களுக்குப் பிறகு, தற்போது இந்து கோவில் ஒன்று சேதப்படுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் பங்களாதேஷின் நரைல் மாவட்டத்தில் நடந்துள்ளது. அங்கு கும்பல் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பல வீடுகளைத் தாக்கி சேதப்படுத்தியது.
திகோலியா கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை இந்து சிறுவன் ஒருவரின் சமூக ஊடகப் பதிவுக்கு எதிர்வினை ஆற்றவே இந்த வன்முறை நடத்தப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்து குடும்பத்தைச் சேர்ந்த வீடு ஒன்றும் தீ வைத்து எரிக்கப்பட்டது. வன்முறையில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரன் சந்திர பால் தெரிவித்தார்.
ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களை கோபப்படுத்தும் வகையில் இந்து சிறுவன் ஏதோ பதிவிட்டதாக பால் கூறினார். நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்க சட்ட அமலாக்கப் பணியாளர்கள் பணியாற்றி வருவதாக நரைல் காவல் கண்காணிப்பாளர் பிரபீர் குமார் ராய் தெரிவித்தார்.
எனினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…