Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அடித்து நொறுக்கப்பட்ட இந்து கோவில்கள்...பாகிஸ்தானில் பயங்கரம்..!

madhankumar June 10, 2022 & 12:33 [IST]
அடித்து நொறுக்கப்பட்ட இந்து கோவில்கள்...பாகிஸ்தானில் பயங்கரம்..!Representative Image.

பாகிஸ்தானின் கராச்சிக்கு அடுத்ததாக உள்ள கோரங்கி பகுதியில் உள்ள உள்ள ஸ்ரீமாரிமாதா கோவிலில் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு வந்த மர்மநபர்கள் அங்கு இருந்த சாமிகளின் சிலைகளை அடித்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கோவிலில் சிலை சேதப்படுத்தப்பட்டதை மறைக்கும் வகையில் துணிகள் கட்டப்பட்டது.

கோரங்கி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட "ஜே" பகுதியில் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் இந்துக்களிடையே அச்சம் நிலவி வருகிறது, இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தியபோது 6 முதல் 8 நபர்கள் வரை மோட்டார் சைக்கிளில் இங்கு வந்து சிலைகளை அடித்து நொறுக்கிவிட்டு சென்றனர், அவர்கள் யார் என்பது எங்களுக்கு தெரியவில்லை, எதற்காக உடைத்தனர் என்பதும் தெரியவில்லை என கூறியுள்ளனர்.

பாகிஸ்தானில் தோராயமாக 90 லட்சம் இந்துக்கள் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் அதிகாரபூர்வ கணக்கின்படி 75 லட்சம் இந்துக்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிலை உடைப்பு சம்பவம் அந்த பகுதியில் இருக்கும் இந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்