வடகொரியா புதிய அணுகுண்டு சோதனையை நடத்துவதை பெய்ஜிங் விரும்பவில்லை என்று சீனாவின் ஐநா தூதர் தெரிவித்துள்ளார்.
ஆசியாவின் ராக்கி பாய்-ஆக வலம் வரும் கிம் ஜாங் உன் ஏவுகணை சோதனைகளை செய்து அமெரிக்காவிற்கு பயம் காட்டி வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வடகொரிய நடத்திய ஏவுகணை சோதனை ஜப்பான் கடலில் விழுத்தாகவும் இதனால் ஜாப்பன் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்ப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. இதனைதொடர்ந்து வடகொரிய அடுத்த சில நாட்களில் அதிகவீச்சு கொண்ட ஏவுகணை சோதனை செய்ய வாய்ப்புள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை தெரிவித்தது. இந்நிலையில், வடகொரிய புதிய அணுகுண்டு சோதனை செய்வதை சீனா விரும்பவில்லை என ஐநாவுக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வடகொரிய மேம்படுத்தப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரிய மீது தடைகளை விதிக்க கோரி ஐநாவில் அமெரிக்கா செய்த முயற்சியை சீனா வீட்டோ செய்தது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…