காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் அட்டூழியம் அதிகரித்துள்ளது. இந்து மதத்தினர், மற்றும் வெளி மாநிலத்தவர்களை பயங்கரவாதிகள் செய்துவருகின்றனர். இந்நிலையில் பயங்கரவாதிகள் வேட்டையை பாதுகாப்புத்துறையினர் அதிகப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் ரிஷிபுரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று மாலை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனை தொடர்ந்து, அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.
இரு தரப்பிற்கும் பயங்கர துப்பாக்கிசூடு நடந்தது. இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிசூட்டில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான், அவன் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி நிசர் கான்டெ என்பது தெரிய வந்துள்ளது. பயங்கரவாதியிடமிருந்து துப்பாக்கி, வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
என்கவுண்டர் நடந்த பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதால் துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த என்கவுண்டரின் போது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையினர் 3 பேர், பொதுமக்களில் ஒருவர் என மொத்தம் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…