சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டு வசதி குடியிருப்பு கட்டிடத்தில் சுமார் 606 குடும்பங்கள் வசித்து வருகின்றன. வீட்டுவசதி வாரிய குடியிருப்பு கட்டிடத்தின் டி பிளாக்கில் ஏற்பட்ட மின்கசிவால் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் டி பிளாக்கில் இருந்து கரும்புகை வெளிவரத் தொடங்கியது. அதன் பின்னர் தீ மளமளவென பரவத் தொடங்கி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.இதனை கண்ட குடியிருப்புவாசிகள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ஜே.ஜே. நகர் மற்றும் கோயம்பேடு தீயணைப்புத் துறையினர் போராடி டி பிளாக்கில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு தீ பரவிவிட கூடாது என்பதற்காக தீவிரமாக தீயை அணைக்கும் முயற்ச்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட இருந்த பெரிய உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
தீ விபத்து குறித்து போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒயர்கள் தரமானதாக இல்லை என்றும், 15 மாடி கட்டிட தளங்களில் சரியான குடிநீர் வசதியும் இல்லை. தீயை அணைக்க தேவையான அளவுக்கு கூட தண்ணீர் இல்லை என்று அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…