Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கிரிக்கெட் பேட்டால் மனைவியை கொன்ற கணவன்...பின்னணி என்ன..?

madhankumar June 13, 2022 & 12:17 [IST]
கிரிக்கெட் பேட்டால் மனைவியை கொன்ற கணவன்...பின்னணி என்ன..?Representative Image.

சேலம் ரெட்டிபட்டி பகுதியில் வசித்து வருபவர்  கீர்த்திராஜ், தனஸ்ரீயா தம்பதி, இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இதனையடுத்து கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு நடந்துவந்துள்ளது. இந்நிலையில் கணவனுடன் சண்டையிட்டுவிட்டு தனது தாய் வீட்டில் சென்று தங்கியுள்ளார் தனஸ்ரீயா.

இதனையடுத்து மனைவியை சமாதானப்படுத்தி அழைத்துவந்துள்ளார் கீர்த்திராஜ், பின்னர் தனஸ்ரீயா தற்கொலை செய்துகொண்டார் என அவரது பெற்றோர் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் பதறடியடித்துக்கொண்டு வந்து பார்த்தபோது அவரின் தலை உடல்களில் காயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த தனஸ்ரீயாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீது பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், பெண்ணின்  கணவர் கீர்த்திராஜ் மற்றும் அவரது பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து தனஸ்ரீயா பெற்றோர்களிடம் விசாரித்தபோது கீர்த்திராஜ் தினமும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், சம்பவ நாள் அன்று சமாதானம் பேசி அழைத்து சென்று கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்றுள்ளார் என கூறியுள்ளனர். இந்த விவகாரம் சேலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்