மனைவிக்கு அரசு வேலை கிடைத்த பின்னர் அந்த வேலைக்கு சேலை வேண்டாம் என கணவர் கூறியுள்ளார், அதனை கேட்காமல் வேலைக்கு செல்வேன் என அடம்பிடித்தால் மனைவியின் கையை துண்டாக வெட்டிய கணவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு வாங்க மாநிலம் கிழக்கு பர்த்வான் மாவட்டத்தைச் சேர்ந்த ஷேர் முகமது என்பவரது மனைவி ரேணு காதுன். இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கு அரசு மருத்துவமனையில் சேருவதற்கு வாய்ப்பு வந்துள்ளது. அந்த வேலை வேண்டாம் என ஷேர் முகமது கூறியுள்ளார், ஆனால் அந்த வேளைக்கு தான் செல்வேன் என ரேணு காதுன் அடம்பிடித்துள்ளார், இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று இருவருக்கும் தகராறு அதிகரித்துள்ளது, இதனால் ஆத்திரமடைந்த ஷேர் முகமது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ரேணு காதுன் கையை வெட்டியுள்ளார், இதன் பின் அவரே மருத்துவமனையில் அனுமதித்துள்ளார், அங்கு சென்று முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார், இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனையறிந்த ஷேர் முகமது தலைமறைவாகியுள்ளார். மருத்துவமனைக்கு வந்த போலீசாரிடம் ரேணு காதுன் நடந்தவற்றை கூறியுள்ளார்.
மனைவிக்கு அரசு வேலை கிடைத்தால் தன்னைவிட்டு பிரிந்து சென்று விடுவார் என பயத்தில் கையை வெட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள ஷேர் முகமதுவை போலீசார் தேடி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…