காவல் துறைக்கு நிறைவான ஊதியத்தை அரசு கொடுப்பதால், ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்க தேவையில்லை என்றும், அரசால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை மீறி விற்பனை செய்யும் நபர்கள் மீது குண்டாஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என கன்னியாகுமரி சரக டிஎஸ்பி மேஷ்குமார் எச்சரித்துள்ளார். சர்வதேச சுற்றுலா ஸ்தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மட்டும் இல்லாமல் உலகெங்கிலும் இருந்து தினமும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இங்கு ஏராளமான தங்கும் விடுதிகள் மற்றும் தனியார் மதுபான கூடங்களும் உள்ளன. இங்குள்ள ஒரு சில தனியார் மதுபான கூடங்களில் அரசு நிர்ணயித்துள்ள நேரத்தை கணக்கிடாமல் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தடுக்கும் விதமாக கன்னியாகுமரி பகுதியில் உள்ள தனியார் மதுபான கூடங்களின் உரிமையாளர்களை கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு அழைத்து புதிதாக பொறுப்பேற்றுள்ள கன்னியாகுமரி சரக டி எஸ் பி மகேஷ் குமார் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது டிஎஸ்பி மகேஷ் குமார் பேசுகையில், அரசு நிர்ணயித்துள்ள நேரத்ததில் மட்டுமே தனியார் மதுபான கூடங்கள் செயல்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் பார்சல் கொடுக்க கூடாது.சட்டத்திற்கு புறம்பாக மது விற்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பேன். மீறினால் அவர்கள் மீது குண்டாஸ் சட்டம் பாயும். தமிழக அரசு காவல்துறையில் பணி புரியும் அனைவருக்கும் நிறைவான ஊதியத்தை கொடுக்கிறது. ஒரு பைசா கூட யாரும் லஞ்சம் கொடுக்க தேவை இல்லை, என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…