சென்னை: விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக மெட்ரோ சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
விம்கோ நகர் மெட்ரோ இரயில் நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட மின் வினியோக கோளாறு காரணமாக விம்கோ நகர் பணிமனை செல்லும் மெட்ரோ இரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விம்கோ நகர் மெட்ரோ இரயில் நிலையம் மற்றும் டோல்கேட் மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு வழிப்பாதையில் மெட்ரோ ரயில் சேவை 18 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மின் விநியோக கோளாறை சரி செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மின் விநியோக கோளாறு விரைவில் சரி செய்யப்பட்டு வழக்கம் போல் மெட்ரோ இரயில் சேவைகள் இயக்கப்படும். மெட்ரோ இரயில் பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த சிரமத்திற்கு மெட்ரோ இரயில் நிர்வாகம் வருந்துகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…