இங்கிலாந்தில் பள்ளி சீருடை அணிந்து வரும் மாணவிகள் மீது அதிகளவில் பாலியல் சீண்டல்கள் நடைபெறுவதாக புகார்கள் குவிந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலும் பெண்களுக்கு பள்ளி சீருடையாக சட்டையும், மினி ஸ்கர்ட்டும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் இங்கிலாந்தை சேர்ந்த பல மாணவிகள் தாங்கள் பள்ளி சீருடை அணியும்போது பாலியல்ரீதியான சீண்டலுக்கு உள்ளாவதாக புகாரளித்துள்ளனர்.
அந்த புகாரில் பெரும்பாலும் சாதாரண உடையில் செல்லும்போது வரும் பாலியல் கிண்டல்கள், சீண்டல்களை விட பள்ளி சீருடையில் இருக்கும்போது அதிகமானவற்றை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இதற்க்கு காரணம் ஆபாச படங்களில் நடிகைகள் பள்ளி சீருடை பயன்படுத்துவது என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே ஆபாச படங்களில் பெண்கள் பள்ளி சீருடை அணிந்து வருவது போன்ற காட்சிகளுக்கு தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து 13,400 மாணவிகள் சேர்ந்து அரசுக்கு மனு அனுப்பியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…