விளையாட்டு, சமூக சேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு 12 பேரை நியமன எம்.பி.க்களாக குடியரசுத் தலைவர் நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா மாநிலங்களவை எம்.பி.ஆக நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து கடந்த வாரம் திங்கள் கிழமை நியமன உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றுக்கொண்டனர். பொது இளையராஜா அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்ததால். அவரால் பதவி ஈர்ப்பு விழாவில் கலந்துகொள்ளமுடியவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று மாநிலங்களவை எம்.பி.ஆக இளையராஜா பதவியேற்றுக்கொண்டார், அவர் பதவி பிரமணத்தில் மாநிலங்களவையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் இளையராஜா எனும் நான், சட்டத்தினால் நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும், பற்று உறுதியும் கொண்டிருப்பேன் என்றும் இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் உறுதியாக பற்றிருப்பேன் என்றும் நான் இப்போது ஏற்கவிருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் கடவுளின் பெயரால் ஆணையிட்டு கூறுகிறேன் என்று தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…