கணவன் வேறொரு பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பான தகாத உறவில் இருந்து வந்த நிலையில், கடுப்பான மனைவி கோபத்தில் கணவன் தூங்கும்போது கட்டிலுடன் தீவைத்து கொளுத்திய சம்பவம் சிவகங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள ஜீவா நகரைச் சேர்ந்தவர்கள் லிங்கநாதன் மற்றும் அங்கயற்கண்ணி. கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்த நிலையில், இந்த தம்பதியினருக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ளார்.
திருமண வாழக்கை நன்றாக போய்க்கொண்டிருந்த நிலையில், சமீப காலமாக இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இருவரும் முகம் கொடுத்து பேசிக்கொள்வது கூட இல்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு லிங்கநாதன் இரவு நன்றாக அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென தனது உடலில் தீ பற்றி எரிவதை உணர்ந்து பதறி எழுந்தார். தீயை அணைத்துக் கொண்டே பக்கத்து வீட்டுக்கு சென்று மனைவி தன்னை கொல்லப்பார்ப்பதாக கூறி தீக்காயங்களை காட்டியுள்ளார்.
இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மானாமதுரை போலீசார் லிங்கநாதன் மனைவி அங்கயற்கண்ணியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், லிங்கநாதன் வேறொரு பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பான தகாத உறவு வைத்து வைத்ததால் கணவனை கொலை செய்ய உடலில் தீ வைத்தது தெரிய வந்தது.
இதையடுத்து அங்கயற்கண்ணியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…