சேலம் மாவட்டம் சூரமங்கலம் அடுத்த முல்லை நகர் பகுதியை சேர்ந்த தியாகலிங்கம் மனைவி ராஜலட்சுமி. இவர்களுது மகளான தனுஸ்ரீ க்கும் (வயது 26) அதே பகுதியை சேர்ந்த கீர்த்திராஜ் (வயது 31) என்பவருக்கும் கடந்த மூண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் சேலம் ரெட்டிபட்டியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தனர்.
திருமணம் ஆனதில் இருந்து கீர்த்திராஜ் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் தனுஸ்ரீ அவரது பெற்றோர் வீட்டிற்கு அடிக்கடி சென்றுவிடுவார் என கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் கணவருடன் சண்டை போட்டுகொண்டு வீட்டில் இருந்து வெளியிரி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார் தனுஸ்ரீ.
இதனையடுத்து அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு கூட்டிவந்த கீர்த்தி ராஜ் அன்று இரவு தனுஸ்ரீ தற்கொலை செய்துவிட்டார் என தனுஸ்ரீவியில் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பதறடியடித்துக்கொண்டு வந்த அவர்கள் அங்குவந்த பார்த்தபோது உடலில் காயங்களுடன் தனுஸ்ரீ இறந்துகிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து தங்களது மகளை கீர்த்திராஜ் தான் கிரிக்கெட் மட்டையை வைத்து அடித்து கொன்றுவிட்டார் என தனுஸ்ரீ பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி விசாரணை நடத்தினார். விசாரணையில் கீர்த்திராஜின் தந்தை பெரியசாமி (60), தாய் ரஞ்சனி (57) ஆகியோர் வரதட்சணை கேட்டு தனுஸ்ரீயை கொடுமை ப்படுத்தியதாக தெரிகிறது. இதைதொடர்ந்து பெரியசாமி, அவருடைய மனைவி இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதில் பெரியசாமி முன்னாள் ஊர்க்காவல்படை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…