முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புதிதாக நியமித்துள்ள ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலரை நீக்கி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து, ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவருகிறது. இதனிடையே, மாவட்டந்தோறும் புதிய நிர்வாகிகளை ஓ.பி.எஸ் தொடர்ந்து கட்சிப் பதவிகளை நியமித்துவருகிறார்.
இந்நிலையில், ஓ.பி.எஸ் ஆதரவு மாவட்ட நிர்வாகிகள் சென்னையில் இன்று ஒன்று கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. அதில், அமமுகவுடன் இணைந்து பணியாற்றுவது, கொங்கு மண்டலத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…