என்ஐஏ நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மாலிக் அவர்களின் வழக்கு நாளை மே 29 ஆம் தேதி அன்று மறுசீலனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் என்ஐஏ நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மாலிக், அவர் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்க்காமல் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்த வழக்கில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர், யாசின் மாலிக்கிற்கு மரண தண்டனை விதிக்கக் கோரி தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதற்கு ஒரு நாளுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரில் உள்ள பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அவரது வழக்கில் மறுபரிசீலனை செய்யக் கோரி அறிவுறுத்தினர்.
பின்னர் இத்தகைய பயங்கரவாதிக்கு மரண தண்டனை வழங்காதது நீதி தவறிழைக்கும் என்று வெள்ளிக்கிழமை அன்று என்ஐஏ உயர்நீதிமன்றத்தில் கூறியது. எனவே, மே 29 ஆம் தேதி ஏஜென்சியின் மனு நீதிபதிகள் சித்தார்த் மிருதுல் மற்றும் தல்வந்த் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணை நடைபெறும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…