Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tamilnadu News Live : அதிகரிக்கும் கொரோனா...! பள்ளிகள் தீவிர ஆலோசனை..!

Muthu Kumar July 05, 2022 & 13:15 [IST]
Tamilnadu News Live : அதிகரிக்கும் கொரோனா...! பள்ளிகள் தீவிர ஆலோசனை..!Representative Image.

Tamilnadu News Live : தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் பள்ளிகளை சுழற்சி முறையில் நடத்துவது குறித்து தனியார் பள்ளிகள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மேலும், மாணவர்களுக்கு பள்ளி வகுப்புகள் மற்றும் தேர்வுகள் ஆன்லைன் வழியாக நடைபெற்றது. இந்நிலையில், நடப்பு ஆண்டில் கொரோனா பாதிப்புகள் குறைந்திருந்த நிலையில் நேரடியாக பள்ளிகள் தொடங்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் தினசரி பாதிப்புகள் திடிரென மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. 

இதனால் தனியார் பள்ளிகள் காலை, மாலை என்று சுழற்சி முறையில் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பள்ளி வருதல் என்பது குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர் ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மேலும், பெற்றோர்களுடன் நடத்தப்படும் ஆலோசனை மற்றும் அரசின் அறிவிப்பை தொடர்ந்து தனியார் பள்ளிகள் வகுப்புகளை மாற்றும் முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்