India News Live : இந்தியாவில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இந்திய ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசு அக்னிபாத் (ராணுவத்தில் 4 ஆண்டுகள் குறுகிய கால பணி அளிக்கும் ராணுவப்பணி) திட்டத்தை அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில், பல மாநிலங்களில் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. இது தொடர்பாக போராட்டம் நடத்திய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கு ராணுவத்தில் இடம் கிடையாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதில், ”ராணுவத்தில் பணியாற்ற ஒழுக்கம், அர்ப்பணிப்பு உணர்வு முக்கியம். எனவே அக்னிபாத் திட்டத்திற்கு விண்ணப்பிப்போரிடம் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்ற உறுதி சான்று பெறப்படும். அது உறுதிபடுத்தப்பட்டவுடன் அவர்கள் ராணுவத்தில் சேர்க்கப்படுவர். போராட்டம் நடத்தியவர்கள் அக்னிபாத் திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…