இன்று பீகாரின் பாட்னாவில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம், தொழில்நுட்பக் கோளாறால் விமானத்தில் தீப்பிடித்ததைத் தொடர்ந்து பாட்னா விமான நிலையத்திற்குத் திரும்பியது.
ஸ்பைஸ்ஜெட் விமானம் மதியம் 12.10 மணியளவில் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட உடனேயே என்ஜினில் தீ பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. பல நிமிடங்கள் காற்றில் பறந்த பிறகு விமானம் அவசரமாக அருகில் இருந்த விமானப்படை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
மேலும் விமான நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள், இந்த காட்சியை நேரில் பார்த்ததாகக் கூற, அந்த சம்பவம் உடனே காட்டுத் தீயாய் பரவ ஆரம்பித்து விட்டது.
இதற்கிடையே பயணிகள் யாரும் காயமடையவில்லை. மாற்று விமானம் மூலம் அவர்களின் டெல்லி பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
இதற்கிடையே அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நடுக்கம் ஏற்பட்டதாகவும் விளக்குகள் அணையத் தொடங்கியதாகவும் தெரிவித்தனர். அங்கிருந்த ஊழியர்கள் எங்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டனர். மேலும் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது." என்று அவர்கள் கூறினர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…