இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மெல்ல குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கொரோனா நிலவரம்
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தினசரி பாதிப்புகள் குறைந்து வந்தது. இந்நிலையில், 3 மாதங்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு நேற்று 5 ஆயிரத்தை தாண்டி இருந்த நிலையில் இன்று 14 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நிலவரப்படி கொரோனாவால் புதிதாக 14,830 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இதுவரை இந்தியாவில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 4,39,20,451 ஆக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,26,110 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 18,159 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,32,46,829 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,47,512 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது,
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…