காயம் காரணமாக 2022 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இருந்து இந்திய தடகள சாம்பியன் நீரஜ் சோப்ரா விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க மாட்டார் என இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது. ஓரிகானில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் வரலாற்று வெள்ளிப் பதக்கம் வென்ற சோப்ரா, போட்டியின் முடிவில் தனது வலது மேல் கால் பகுதியில் காயம் ஏற்ப்பட்டதால் அவரால் தொடர்ந்து விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டுவிட் செய்துள்ள இந்திய ஒலிம்பிக் சங்கம்; ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா தனது காயம் காரணமாக 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க மாட்டர் என்றும் இந்த சவாலான காலத்தில் அவருக்கு ஆதரவாக இருப்போம் என தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…