Corona Situation : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா நிலவரம்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,202 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு 2,858 ஆக இருந்தது. நேற்று 2,487 ஆக குறைந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது.
மாநில வாரியாக நிலவரம்
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் டெல்லியில் 613, கேரளாவில் 428, அரியானாவில் 302, மகாராஷ்டிரத்தில் 255, உத்தரபிரதேசத்தில் 153, கர்நாடகாவில் 126 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 23 ஆயிரத்து 801 ஆக உயர்ந்தது.
கொரோனா பலி
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் உயிரிழதுள்ளனர். இதில் கேரளாவில் திருத்தி அமைக்கப்பட்ட பட்டியலில் 22 உயிரிழப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் 3 பேர், மகாராஷ்டிரா, ஜம்முகாஷ்மீரில் ஒருவரும் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,24,241 ஆக உயர்ந்துள்ளது.
குணம் அடைந்தவர்கள்
கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 2,550 பேர் குணமடந்து வீடு திரும்பினர். இந்நிலையில் இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 82 ஆயிரத்து 243 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 17,317 ஆக குறைந்துள்ளது. இது நேற்றை விட 375குறைவு ஆகும்.
தடுப்பூசி நிலவரம்
இந்தியா முழுவதும் நேற்று 3,10,218 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 191 கோடியே 37 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று 2,97,242 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை எண்ணிக்கை 84.41 கோடியாக உயர்ந்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…