Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Assam Latest News : திடீர் வெள்ளப்பெருக்கு..? நீரில் மூழ்கிய 222 கிராமங்கள்..!

Muthu Kumar May 16, 2022 & 10:00 [IST]
Assam Latest News : திடீர் வெள்ளப்பெருக்கு..? நீரில் மூழ்கிய 222 கிராமங்கள்..!Representative Image.

Assam Latest News :  அசாமில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் 222 கிராமங்கள் மூழ்கடிக்கப்பட்டன. மேலும் 1,0321 ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பாதிப்பு

அசாமில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 57,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். மேலும் இதனால் ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் லக்கிம்பூர் மற்றும் நாகோன் மாவட்டங்களில் உள்ள சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்ப்பாசன கால்வாய்கள் சேதமடைந்துள்ளன. 

நிலச்சரிவு
 
அசாமில் மாநிலத்தில் உள்ள திமா ஹசாவ் மாவட்டத்தில் இடைவிடாத மழையால் பெய்ததால் 12 கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ரயில் பாதை, பாலங்கள் மற்றும் சாலை தகவல் தொடர்புகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 

நிவாரண பணி

அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், துணை ராணுவப் படைகள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் மீட்பு படையினர் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மீட்பு பணி

அசாம் மாநிலம் டிடோக்செரா ரெயில் நிலையத்தில் சிக்கித் தவித்த சுமார் 1,245 பயணிகள் பதர்பூர் மற்றும் சில்சார் வரை அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும் 119 பயணிகள் விமானப்படை விமானம் மூலம் அனுப்பப்பட்டதாக ரயில்வேத்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்