உலக சுகாதார அமைப்பு (WHO) இந்தியாவில் மைடன் பார்மாசூட்டிகல் லிமிடெட் (Maiden Pharmaceuticals) எனும் மருந்து தயாரிப்பு நிறுவனம் தயாரித்த நான்கு இருமல் மற்றும் சளி சிரப்கள் குறித்து எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. காம்பியாவில் 66 குழந்தைகளின் இறப்புடன் இந்த மருந்து தொடர்புடையதாக இருக்கலாம் என்று எச்சரித்தது.
அறிக்கைகளின்படி, உலகளாவிய சுகாதார அமைப்பு இந்தியாவில் உள்ள நிறுவனம் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருவதாகக் கூறியது.
"நான்கு தயாரிப்புகளில் ஒவ்வொன்றின் மாதிரிகளின் ஆய்வக பகுப்பாய்வு, அவை ஏற்றுக்கொள்ள முடியாத அளவு டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் ஆகியவற்றை கொண்டிருக்கின்றன என்பதை உறுதிப்படுத்துகிறது." என்று உலக சுகாதார அமைப்பு கூறியது.
குழந்தைகள் இறந்ததாக சந்தேகிக்கப்படும் காம்பியாவிற்கு தொழில்நுட்ப உதவி மற்றும் ஆலோசனைகளை வழங்குவதாக உலக சுகாதார அமைப்பு செப்டம்பர் 29 அன்று இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலுக்கு (DCGI) தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த விஷயத்தில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று டிஜிசிஐ உலக சுகாதார அமைப்புக்கு உறுதியளித்துள்ளதாகக் மேலும் கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில், ஹரியானாவில் சோனிபட்டில் இயங்கும் மைடன் பார்மாசூட்டிகல் லிமிடெட் நிறுவனம் டிஜிசிஐ'யால் குறிப்பிடப்பட்ட தயாரிப்புகளுக்கு உரிமம் பெற்ற உற்பத்தியாளர் மற்றும் இந்த தயாரிப்புகளுக்கான உற்பத்தி அனுமதியைக் கொண்டுள்ளது. நிறுவனம் இதுவரை இந்த தயாரிப்புகளை காம்பியாவிற்கு மட்டுமே தயாரித்து ஏற்றுமதி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…