Cine News : கோவையில் இன்ஸ்டாகிராமில் நட்புடன் பழகிய பெண்ணிடம் காதலிக்குமாறு வற்புறுத்தி கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் சேலத்தைச் சேர்ந்த தினேஷ் என்ற இளஞருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில், திடீரென அந்த இளம் பெண்ணை காதலிப்பதாக தினேஷ் அப்பெண்ணிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில், தினேஷின் காதலை ஏற்க மறுத்த இளம்பெண் இன்ஸ்டாகிராமில் அவருடன் பேசுவதை நிறுத்தி விட்டார். இதனையடுத்து, ஆத்திரமடைந்த தினேஷ் இளம்பெண் பணிபுரியும் அலுவலகத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த தினேஷ் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனையடுத்து, அந்த இளம்பெண் தற்போது படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறா. இந்நிலையில் தினேஷை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…