Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திருப்பதியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தரிசனம் - சந்திரயான்-3 வெற்றியடைய பிரார்த்தனை!

saraswathi Updated:
திருப்பதியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தரிசனம் - சந்திரயான்-3 வெற்றியடைய பிரார்த்தனை!Representative Image.

சந்திரயான்-3 விண்கலம் நாளை விண்ணில் செலுத்தப்படவுள்ள நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் அதன் மாதிரி திருப்பதியில் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான எல்.வி.எம்.3-எம்4 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை பிற்பகல் 2.35 மணிக்கு இந்த விண்கலம் விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுன்டவுன் இன்று பிற்பகல் 1.05 மணிக்கு தொடங்குகிறது.

சந்திரயான்-3ஐ விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், சந்திரயான்-3 மாதிரி வடிவத்தை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், இந்தியா தனது 3வது நிலவுப் பயணமாக சந்திரயான்-3 விண்கலத்தை நாளை விண்ணில் செலுத்துகிறது. இந்த பணிகள் அனைத்தும் வெற்றியடைய வேண்டும். சந்திரயான்-3 ஆகஸ்ட் 23ம் தேதிக்குள் நிலவில் தரையிரங்கவும் பிரார்த்தனை செய்தேன். இவ்வாறு அவர் பேசினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்