பொள்ளாச்சி பகுதியில் முட்புதரில் கொடூர நிலையில் கிண்டாந்த பெண் சட்டத்தால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
பொள்ளாச்சி அருகே சீலக்கம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் ஒரு விவசாயி. இவருக்கு திருமணமாகி நாகவேணி (46) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். தினமும் காலையில் நாகவேணி மாடுகளை அழைத்துச் சென்று புள் மேய புதுப்பாளையம் பகுதிக்கு செல்வார். அதே போல் நேற்று எப்பையும் போல மேய்ச்சலுக்கு மாடுகளை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.
ஆனால் மாடுகள் மட்டும் வீட்டுக்கு திரும்பியது, நாகவேணியை காணவில்லை. நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் பயந்து போன ராஜேந்திரன் மற்றும் அவர்களின் உறவினர்கள் நாகராணியை தேட ஆரம்பித்தனர். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் நாகராணி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியடையாந்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு தகவல் தர, அங்கு வந்த போலீசார் நகரணியின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அவர்களும் வந்து விசாரணை நடத்தினார். இது குறித்து கூறுகையில், இந்த சம்பவம் திருப்பூர் மாவட்ட எல்லையில் நடந்திருந்தாலும் இரண்டு மாவட்ட போலீசும் சேர்ந்து 6 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…