ரஷ்யாவின் கச்சா எண்ணெயை அதிகம் வாங்கும் நாடுகளில் ஒன்றான இந்தியா, அந்த கச்சா எண்ணெயில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எரிபொருட்களை சுத்திகரித்து ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வருகிறது. இந்த நிலையில், ரஷ்யா கச்சா பொருட்களை வாங்கும் இந்தியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் பொரெல் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையடுத்து, ஜோசப் பொரெல் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், ரஷ்ய கச்சா எண்ணெய் வேறொரு நாட்டில் சுத்திகரிக்கப்படும்போது, அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை ரஷ்யா உடையதாக கருத முடியாது என ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒழுங்குமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா மிகக்குறைவாகவே ரஷ்ய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…