வெள்ளை மாளிகை எதிரே இருக்கும் பூங்காவின் பாதுகாப்புத் தடையின் மீது யு-ஹால் டிரக்கை வேண்டுமென்றே மோதியதாக மிசோரி நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து முழு விவரத்தையும் பாப்போம்.
திங்கட்கிழமை அன்று இரவு 10 மணியளவில் லாஃபாயெட் சதுக்கத்தின் வடக்குப் பகுதியில் உள்ள தடுப்புச் சுவரில் யு-ஹால் டிரக் ஓட்டுநர் வேண்டுமென்று மோதியுள்ளார். விசாரணை மேற்கொண்டதில், அவர் செயின்ட் லூயிஸ் புறநகர் பகுதியான மிசோரியில் உள்ள செஸ்டர்ஃபீல்டில் பகுதியை சேர்ந்த 19 வயதான சாய் வர்ஷித் கந்துலா என அடையாளம் காணப்பட்டார். அவர் டிரக்கை மோதிய பின்னர் நாஜிக் கொடியுடன் கீழே இறங்கி கோஷமிட்டுள்ளார். சம்பவ இடத்தில் இருந்த போலீசார் அவரை கைது செய்தனர். இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கையில், "கந்துலா அரசாங்கத்தை கைப்பற்றுவதற்காக அங்கு வந்ததாகவும், ஜனாதிபதி ஜோ பிடனை கொல்ல விரும்புவதாகவும்" அங்கு இருந்த மக்கள் தெரிவித்தனர். சில பாதுகாப்பு காரணங்களுக்காக மற்ற தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…