தமிழகத்தில் ஜல்லிக்கட்டை தடை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை உச்ச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி பீட்டா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜோசப் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழகம், மகாராஷ்டிரா சார்பில் கொண்டுவந்துள்ள சட்டங்கள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், இந்த விளையாட்டுக்களால் விலங்குகள் துன்புறுத்தப்படுகிறது என பீட்டா அமைப்பு வாதிட்டது.
எனினும், இது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்ட பின்னர், வழக்கின் விசாரணையை வரும் நவம்பர் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…