Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திருத்துறைப்பூண்டியில் மருத்துவர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகை பறிமுதல்!

Baskaran Updated:
திருத்துறைப்பூண்டியில் மருத்துவர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகை பறிமுதல்!Representative Image.

திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் மருத்துவர் பிரேம்குமார் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 92சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். மருத்துவரான இவர் குடும்பத்துடன் ரயில் நிலையம் அருகே வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மே மாதம் 14ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 92சவரன் தங்க நகை, ரூ.2லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

மருத்துவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்ட பிரவீன்குமார், செல்வகுமார் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 92சவரன் தங்க நகை மற்றும் ரூ.2லட்சம் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்