ஜார்க்கண்டின் தன்பாத் பகுதியில் உள்ள தனியார் முதியோர் இல்லத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 2 டாக்டர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறந்தவர்களில் மருத்துவ நிறுவன உரிமையாளர் டாக்டர் விகாஸ் ஹஸ்ரா, அவரது மனைவி டாக்டர் பிரேமா ஹஸ்ரா, உரிமையாளரின் மருமகன் சோகன் கமாரி மற்றும் வீட்டுப் பணிப்பெண் தாரா தேவி ஆகியோர் அடங்குவர்.
ராஞ்சியில் இருந்து 170 கிமீ தொலைவில் உள்ள தன்பாத்தின் பேங்க் மோர் பகுதியில் உள்ள நர்சிங் ஹோம் மற்றும் தனியார் இல்லத்தின் ஸ்டோர் அறையில் அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
தன்பாத் துணை ஆட்சியர் பிரேம் குமார் திவாரி, “ஸ்டோர் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி உட்பட ஐந்து பேர் மூச்சுத்திணறல் காரணமாக இறந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மேலும் விசாரணை நடந்து வருகிறது.
உயிரிழந்த நால்வர் அடையாளம் காணப்பட்ட நிலையில், ஐந்தாவது நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை." என தெரிவித்தார்.
ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ட்விட்டரில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தன்பாத்தில் உள்ள ஹஸ்ரா நினைவு மருத்துவமனையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் பிரபல மருத்துவர் தம்பதிகளான டாக்டர் விகாஸ், பிரேமா ஹஸ்ரா உள்பட 6 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.அவர்களது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். இந்த கடினமான நேர துயரத்தைத் தாங்கும் வலிமையை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்குத் தருவாயாக." எனபதிவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…