Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

மீண்டும் தலைதூக்கும் கொரோனா.. அதிக பாதிப்பு இந்த இடத்தில் தான்..

Nandhinipriya Ganeshan Updated:
மீண்டும் தலைதூக்கும் கொரோனா.. அதிக பாதிப்பு இந்த இடத்தில் தான்..Representative Image.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. கடந்த 19 ஆம் தேதி ஒரே நாளில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. ஆனால், மறுநாள் 918 ஆகவும், நேற்று 646 ஆகவும் பாதிப்பு குறைந்த நிலையில், மீண்டும் இன்று மீண்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி (காலை 8 மணி வரை) நேரத்தில் புதிதாக 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக,

மகாராஷ்டிரா - 280 பேர்

குஜராத் - 176 பேர்

கேரளா - 113 பேர்

கர்நாடகா - 113 பேர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 98 ஆயிரத்து 118 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா பாதிப்பால் நேற்று மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், கேரளா, சத்தீஷ்கரில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,813 ஆக உயர்ந்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்