தென் கொரியாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தில் பிரபல கே பாப் சிங்கர் லீ ஜிகானும் ஒருவர் என்னும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
தென் கொரியாவில் ஹாலோவீன் என்னும் பேய் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நடைபெறுவது வழக்கம். மதசார்பற்ற இந்த திருவிழாவில் மரணமடைந்த மக்களை மகிழ்விக்கும் வண்ணம் இந்த நிகழ்வு நடைபெறும். இந்த திருநாளை பார்த்து ரசிக்க பல நாடுகளில் இருந்தும் மக்கள் சுற்றுலா வருவது வழக்கம். இந்த ஆண்டும் ஹாலோவீன் திருவிழா அன்று மக்கள் அனைவரும் பேய் வேடம் அணிந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ஒரு தெருவுக்குள் நுழையும் போது கூட்டம் அதிகமாகியதால் மக்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரழந்தனர். அதில் அதிகப்படியானோர் இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் முதியவர்கள் என்று மீட்பு படையினர் தெரிவித்தனர். இதுவரை அந்த கூட்ட நெரிசலில் சிக்கி 150-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் உயிருடன் மீட்கப்பட்ட மக்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை வழங்குவதாக தகவல் வெளியாகியது.
இந்த செய்தி உலக நாடுகளை உலுக்கிய நிலையில், சமீபத்தில் கிடைத்த தகவல் கே பாப் சிங்கர் லீ ஜிகான் அந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்துவிட்டார். வெறும் 24 வயதே ஆன லீ ஜிகான் பாடகர் மற்றும் நடிகரும் ஆவார். இவர் ப்ரொடியூஸ் 101 என்கிற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று அதிகளவிலான ரசிகர்களின் இதயங்களை வென்றிருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் இந்த திருவிழா நடக்காத நிலையில், இந்த ஆடு விமர்சையாக கொண்டாட நினைத்த மக்களுக்கு நேர்ந்த கொடுமையால் உலக நாடுகள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். மேலும் அந்நாட்டு அதிபர் யுன் சுக் இயோல் நாடு முழுவதும் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…