Nithyananda LIVE : பிரபல சாமியாரான நித்தியானந்தா கடந்த 3 மாத காலமாக சமாதி நிலையில் இருந்து வந்த நிலையில் நேற்று மீண்டும் பக்தர்களுக்கு ஆன்லைனில் தோன்றியுள்ளார்.
சர்ச்சைகளுக்கு பெயர்போன சாமியார் நித்தியானந்தா, தனது பக்தர்களிடம் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்தே மாயமானார். ஆனால், கொரோனா ஊரடங்கின்போது நித்தியானந்தா யூடியூபில் தோன்றினார்.
மேலும், கைலாசா என்ற ஒரு புதிய நாட்டை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்;. மேலும் அந்த நாட்டிற்க்கு செல்ல பாஸ்போர்ட், நாணயங்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக நித்தியானந்தாவின் வீடியோ எதும் வரவில்லை. இதனால் நித்தியானந்தா உயிரிழந்துவிட்டதாக சர்ச்சையானது. இதனையடுத்து,ஆனால் நித்தியானந்தா சமாதி நிலையில் இருப்பதாக தகவல் வெளியானது. மேலும், ஜூலை 13ம் தேதி குருபூர்ணிமா சத்சங்கம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நேற்று சமூக வலைதளங்களில் நித்தியானந்தா வீடியோ வெளியிட்டார். அதில், “இனி தொடர்ந்து சத்சங்கங்கள் நடைபெறும், தான் இந்த மூன்று மாத காலத்தில் பெரும் தீர்க்கத்தை அடைந்துள்ளேன்”அவர் பேசியுள்ளார்.
சாவே என்னை பார்த்தால் பயந்து ஓடும்டா.. நான் மாறவில்லை. உடல் மாறியுள்ளது. உங்கள் உடல் இறப்பதற்கு முன் உங்கள் மன பல முறை இறப்பது நல்லது. அப்போதுதான் வெவ்வேறு வாழ்கையை ஒரே உடலில் வாழலாம்” என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…