தென்மேற்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கர்நாடக நீர்நிலைகள் நிரம்பிய நிலையில் வெளியேற்றப்படும் உபரிநீரால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதணையடுத்து, 16 கண் மதகு வழியாக 25,000 கனஅடி நீரும் நீர்மின் நிலையங்கள் வழியாக 25,000 கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.
மேலும், மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படும் நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…