கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வடக்கு வீதியில் அதிக மக்கள் புழக்கம் மற்றும் கடைகள் என்று எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஊரின் மைய பகுதியில் அமைந்திருந்த நகை கடையை நூதன முறையில் கிளீன் செய்த திருடர்கள். பல சுவாரஸ்ய தகவல்கள் இதோ இந்த பதிவில்.
நிதேஷ் என்னும் நபர் சுமார் 2 ஆண்டுகளாக அந்த பகுதியில் நகை கடை ஒன்று நடத்தி வருகிறார். எப்பையும் போல இன்றும் வியாபாரத்திற்காக காலை வேளையில் ஊழியர்கள் வந்த உடன் கடையை திறந்துள்ளார். உள்ளே சென்று பார்த்ததும் அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. நகைகள் வைத்திருந்த இடங்கள் சிதரிகிடந்துள்ளது, பதறி போய் மேல் மாடிக்கு சென்று பார்த்தால் அங்கேயும் பல வெள்ளி பொருட்கள் காணவில்லை என்று உடைந்து போய்விட்டார். உடனே காவல் துறைக்கு போன் செய்து நடந்ததை புகார் அளித்துள்ளனர்.
போலீஸ் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்ட போது அவர்களுக்கு கிடைத்த தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் இவையே ஆகும். கடையின் மூன்றாவது மாடியில் இருக்கும் இரும்பு கதவு கேஸ் வெல்டிங் மூலமாக ஓட்டை போட்டு உள்ளே செந்தூர் நகைகளை கொள்ளையிட்டது தெரியவந்தது. கடையில் இருந்து என்னென்ன காணாமல் போனது என்று ஆய்வு செய்தபோது சுமார் 75 சவரன் நகை மற்றும் 40 கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. இதனின் மொத்த மதிப்பு 50 லட்சம் ரூபாய் என்றும் தெரிவித்தனர்.
பிறகு ஆதாரங்களை சேகரிக்க மோப்ப நாய், நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். பின்பு கடையில் மேல் பகுதிக்கு வர டெலஸ்கோப் லேடர் பயன்படுத்தி திருடிய பிறகு அதனை பள்ளிக்கு பின் பகுதியில் இருக்கும் முட்புதரில் வீசி சென்றது கண்டறியப்பட்டது. இந்த் திருட்டை மொத்தம் 4 பேர் செய்திருப்பதாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். கடையின் அருகில் இருக்கும் சிசிடிவி கேமெராக்களை ஆய்வு செய்து மூன்று தனிப்படை அமைத்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…