கள்ளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் ஸ்ரீமதி eன்ற மாணவி மரணமடைந்ததையடுத்து கண்டித்து கடந்த 10ம் தேதி நடைபெற்ற கலவரத்தில் பள்ளிக்கூடச் சொத்துகள் சூறையாடப்பட்டன. மேலும், காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், சமூகவலைதளங்கள் இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சிறுமியின் உடல் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த கலவரத்தின் கலந்துகொண்ட சிலர் பள்ளியின் மேஜை, பென்ச், சிலிண்டர் போன்ற பொருட்களை எடுத்துச் சென்றனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாக பகிரப்பட்டன. இந்நிலையில், எடுத்து சென்ற பொருட்களை திரும்ப ஒப்படைக்குமாறு அப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் தண்டோரா மூலமாக அறிவிக்கப்பட்டது.
இதனால், அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள சிலர் தாங்கள் எடுத்த மேசை, பென்ச் மற்றும் இன்னும் பிற பொருட்களை சாலையின் ஓரங்களில் போட்டு சென்றுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…