சென்னையில் யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா சார்பில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக்கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.
இந்நிலையில், புத்தகத்தை வெளியிட்ட பின் பேசிய அவர், “பணம்,புகழ்,பெரிய பெரிய அரசியல்வாதிகளை பார்த்தவன் நான். ஆனால் அதில் சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம் கூட இல்லை. வாழ்க்கையில் சந்தோஷம் நிம்மதி நிரந்தரம் கிடையாது. நான் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்த படங்கள் ராகவேந்திரா மற்றும் பாபா.
இதனையடுத்து, பாபா படத்திற்கு பிறகு நிறைய பேர் இமய மலைக்கு சென்றதாக சொன்னார்கள். என்னுடைய ரசிகர்கள் இந்த இயக்கத்தில் சன்னியாசியாக மாறியுள்ளனர். ஆனால் நான் நடிகராகவே இருக்கிறேன்.
மேலும், இந்த உலகத்தை விட்டு செல்லும் போது சொத்தை சேர்த்து வைத்து செல்வதை விட நோயாளியாக இல்லாமல் செல்வது முக்கியம். அதனால் உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம்” என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…