Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கள்ளக்குறிச்சி சம்பவம்...மீண்டும் திறக்கப்படும் பள்ளி...?...அமைச்சர் அதிரடி.!

madhankumar July 25, 2022 & 17:55 [IST]
கள்ளக்குறிச்சி சம்பவம்...மீண்டும் திறக்கப்படும் பள்ளி...?...அமைச்சர் அதிரடி.!Representative Image.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த தனியார் பள்ளியில் வருகிற 27 ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் அண்டத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூரில் செயல்பட்டு வரும் சக்தி என்கிற தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்றுவந்த மாணவி ஸ்ரீமதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி நடந்த போராட்டம் கலவரமாக மாறி பள்ளி சூறையாடப்பட்டது.

இதில் பள்ளி பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் ஆகிய தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதனையடுத்து கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சிக்கு நேரடி விசிட் அடித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அங்கு ஆய்வுகளை மேற்கொண்டார். பின்னர் பள்ளியில்  முதல் கட்டமாக 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் 27 ஆம் தேதி முதல் நடக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து,  அடுத்த வாரம் முதல் நேரடி வகுப்புகளை தொடங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எரிந்து போன சான்றிதழ்கள் குறித்த விவரங்கள் கல்வி துறை வசம் உள்ளதாகவும், அவற்றை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்