புதுக்கோட்டை கோகர்னேஸ்வரர் கோயிலில் தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை அருகே உள்ள திருக்கோகர்ணத்தில் அமைந்துள்ள பிரகதாம்பாள் கோயில் அமைந்துள்ள அருள்மிகு பிரகதாம்பாள் கோயில் ஆடி மாதம் பத்தாம் நாள் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில், இன்று காலை நடைபெற்ற தேரி திருவிழாவில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தபோது எதிர்பாராத விதமாக தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…