கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் குறித்து வாட்சப் குழுவில் வதந்தியாக்களை பரப்பியதாக திண்டுக்கல்லை சேர்ந்த இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் உள்ள மெட்ரிகுலேசன் பள்ளியில் ப்ளஸ் 2 படித்துவந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக திண்டுக்கல்லை அடுத்துள்ள GNT கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவரும் உதயகுமார் என்ற மாணவரும் பார்வதி கலைக்கல்லூரியில் முதலாமாண்டு படித்துவரும் 17 வயது மாணவரும் இணைந்து Justicesrimathi என்ற பெயரில் வாட்சப் குழு ஒன்றை தொடங்கி உள்ளனர்.
மேலும் அதில் மாணவியின் மரணம் தொடர்பாக நடந்த போராட்டங்கள் ஆகிய விடீயோக்கள் புகைப்படங்கள் ஆகியவற்றை பகிர்ந்துவந்துள்ளார். மேலும் வாட்சப் குழுவின் DP-யில் மாணவியின் புகைப்படத்தை வைத்து வதந்திகளை பரப்பிவந்ததாக கூறி போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…