Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு...!

Muthu Kumar July 23, 2022 & 08:40 [IST]
கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு...!Representative Image.

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில், 11 நாட்கள் கழித்து அவருடைய உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் சடலத்தை 11 நாட்களுக்கு பின்னர் பெற்றுக் கொண்ட பெற்றோர்கள் சொந்த ஊரில் இறுதி சடங்கு நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

இந்நிலையில், மாணவியின் உடலை பார்த்து அவரது பெற்றோர்கள் கதறி அழுத காட்சி காண்போரை நெஞ்சுருக வைத்தது. மேலும், அமைச்சர் சிவி கணேசன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மாணவியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். எம்எல்ஏ உதய சூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மேலும், மருத்துவமனையிலிருந்து மாணவியின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவியின் சொந்த ஊரான பெரியநெசலூர் என்ற கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்