தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டும் என சென்னை மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான 4 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்து மத்திய அரசிட சமர்பித்துள்ளது. இதில் பரந்தூர் மற்றும் பன்னூர் ஆகிய இரண்டு இடங்களில் மத்திய அரசு பரிசீலனை செய்துள்ளது.
இதனையடுத்து, சென்னையின் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைய அதிக வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமையவுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து மாநிலங்களவையில் பேசிய அவர், இறுதி செய்யப்பட்ட இடத்திற்கு மாநில அரசு இட அனுமதியை வழங்க வேண்டியுள்ளதாக கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…