கனிமொழியும் அவரது தாயார் ராசாத்தி அம்மாளும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு போன் போட்டு நன்றி தெரிவித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் திமுக மேலிடத்தால் உற்று நோக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
திமுக எம்பி கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில், ஜெர்மனியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற, சென்னையில் அவருக்கு சிகிச்சை பார்த்த மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து, கனிமொழி சில உறவினர்களுடன் தாயார் ராசாத்தி அம்மாளை அழைத்துக் கொண்டு அவசர சிகிச்சைக்காக ஜெர்மனி சென்றார்.
முன்னதாக இந்த விஷயம் குறித்து மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷாவுக்கு தெரியவர, அவர் நேரடியாகவே கனிமொழிக்கு போன் போட்டு, தாயாரின் உடல்நலம் குறித்து விசாரித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் வெளிநாடு செல்ல மத்திய அரசு தரப்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அது மட்டுமில்லாமல் அமைச்சர் அமித் ஷா, ஜெர்மனியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் கனிமொழி குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் தற்போது சிகிச்சை முடிந்து கனிமொழி குடும்பத்தார் சென்னை திரும்பிவிட்ட நிலையில், கனிமொழி மற்றும் ராசாத்தி அம்மாள் என இருவரும் அமித் ஷாவிற்கு போன் போட்டு தங்கள் நன்றியை தெரிவித்ததாக திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
திமுக மற்றும் பாஜக எதிரும் புதிருமாக அரசியல் செய்துவரும் நிலையில், பாஜக மற்றும் மத்திய அரசில் மோடிக்கு அடுத்து செல்வாக்கு மிக்க நபராக வலம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே நேரடியாக கனிமொழிக்கு உதவியிருப்பது, அவருக்கு டெல்லியில் உள்ள செல்வாக்கை காட்டுவதால், திமுக தலைமையால் இந்த விஷயம் உற்றுநோக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…