சென்னை-மதுரை இடையே நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமான சேவை ஜூலை 10ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னையிலிருந்து மதுரைக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் விமானங்களை இயக்கிவந்தது. இந்த சேவையானது அண்மைக்காலமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஜூலை 10ம் தேதி முதல் சென்னை-மதுரை, மதுரை-சென்னை இடையேயான சேவையை மீண்டும் தொடங்கவுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் 10ம் தேதி முதல் காலை 10.20 மணி மற்றும் இரவு 7.30 மணி ஆகிய என நாள்தோறும் 2 முறை சென்னையிலிருந்து மதுரைக்கு விமான சேவை வழங்கப்படவுள்ளதாகவும், அதேபோல், மதுரையிலிருந்து சென்னைக்கு நண்பகல் 12.05 மணி மற்றும் இரவு 8.55 மணிக்கு நாள்தோறும் 2 முறை விமான சேவை இருக்கும் எனவும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…