நாளை கர்நாடக சட்டசபைத் தேர்தல் நடப்பதற்கு முன்னதாக, இன்றைய நாளில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், கர்நாடக மாநில மக்களுக்கு திறந்த கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கர்நாடகாவில் இந்த 2023 ஆம் ஆண்டிற்கான சட்டசபைத் தேர்தல் ஆனது நாளை நடைபெற உள்ளது. இதனையொட்டி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே வெற்றி பெறுவதற்கான பேரணியை நடத்தினர். பாஜகவின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பெங்களூரில் சனிக்கிழமை அன்று பிரதமர் மோடி அவர்கள் 26 கிமீ ரோட்ஷோவை நடத்தினர். அதே போல, காங்கிரஸ் கட்சியிலும் ராகுல் காந்தி டெலிவரி ஏஜென்ட் உடன் சேர்ந்து ஸ்கூட்டரில் பயணம் செய்தார். இந்த வீடியோ இணையதளத்தில் பரவி வைரலாகி வந்தது.
இந்நிலையில், ஆளும் பாஜகவின் தலைவரான பிரதமர் மோடி அவர்கள் கர்நாடகா மக்களுக்கு திறந்த கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், நீங்கள் எப்போதும் என் மீது அன்பையும், பாசத்தையும் பொழித்திருக்கிறீர்கள். இது எனக்கு கிடைத்த தெய்வீக ஆசிர்வாதமாக உணர்கிறேன் என குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, பாஜக இந்த தேர்தலில் வெற்றி பெற பல்வேறு தகவல்களைக் கொடுத்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…