Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Karnataka Latest News : நாகப்பாம்புடன் குடும்பம் நடத்திய மூதாட்டி..!

Muthu Kumar June 07, 2022 & 15:36 [IST]
Karnataka Latest News : நாகப்பாம்புடன் குடும்பம் நடத்திய மூதாட்டி..!Representative Image.

Karnataka Latest News : கர்நாடக மாநிலத்தில் நாகப்பாம்பை தனது கணவன் என நம்பிய மூதாட்டி 4 நாட்களாக பாம்புடன் வசித்து வந்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை பகுதியை சேர்ந்த மூதாட்டி மானஷா என்பவரது கணவர் சரவவ்வா கம்பாரா என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மூதாட்டி மானஷா வீட்டிற்குள் ஒரு நாகப்பாம்பு நுழைந்துள்ளது. இந்நிலையில், மூதாட்டி மானஷா, இந்த பாம்பு வடிவில் தனது கணவர் வந்துள்ளதாக நம்பியுள்ளார். மேலும், வீட்டிற்க்கு வந்த நாகத்திற்க்கு பால் வைத்ததுள்ளார். மேலும், அந்த நாகப்பாம்புடன் நான்கு நாட்களாக வசித்து வந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் பாம்பை பிடிக்க முயன்றுள்ளனர். இந்நிலையில், மூதாட்டி மானஷா, “அது என்னுடைய கணவர், அதை பிடிக்க கூடாது” என கூறியுள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் வனத்துறைனருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். 

கர்நாடக மாநிலத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் ஆச்சர்யத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்