Karthi Chidambaram : சீனர்களுக்கு விசா பெற்றுத் தர 50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கார்த்தி சிதம்பரத்தைகைது செய்ய தடை இல்லை என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சீனர்களுக்கு விசா பெற்றுத் தர 50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமன், விகாஸ் மகாரியா ஆகியோரின் முன்ஜாமின் மனுக்களை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனையடுத்து, அடுத்த 7 நாள் வரை தங்களை அமலாக்க துறை கைது செய்யாமல் இருக்க அவகாசம் அளிக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை விசாரித்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் , இந்த வழக்கில் தொடர்புடைய கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமன், விகாஸ் மகாரியாவை கைது செய்ய தடை இல்லை என தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…