Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மக்களே ரெடியா?... இன்று முதல் மறுபடியும் தொடங்கியாச்சு! 

KANIMOZHI Updated:
மக்களே ரெடியா?... இன்று முதல் மறுபடியும் தொடங்கியாச்சு! Representative Image.

குன்னூரில் கனமழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட மலை ரயில் சேவை இன்று முதல் தொடங்கியது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

மாண்டஸ் புயல் கரையைக் கடந்திருந்தாலும் தென் தமிழக கடலோர பகுதிகளில் கனமழை நீடித்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கல்லாறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. 

இதனால் கடந்த 14ஆம் தேதி காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டுச் சென்ற மலை ரயில் பாதியில் நிறுத்தப்பட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு திரும்பி வந்தது. அத்துடன் பயணிகளின் டிக்கெட் கட்டணமும் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. 

கல்லாறு மலை ரயில் பாதையில் மண் மற்றும் பாறைகள் சரிந்து இருந்ததால், ரயில் பாதையை சீரமைக்கும் பணி நடைபெற்றது. கடந்த 5 நாட்களாக நடந்து வந்த சீரமைப்பு பணி நிறைவடைந்தது. இதனையடுத்து இன்று காலை 7 மணி அளவில் ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்