கரூர் அருகே வெவ்வேறு இடங்களில் இரண்டு சிறுமிகளை திருமணம் செய்த இரண்டு டிரைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சமூகநல அலுவலர் பூரணம், கரூர் ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்த புகாரில்,
அரவக்குறிச்சி அருகே உள்ள ஒரு பள்ளியில் 15 வயது சிறுமி ஒருவர் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார், இந்த சிறுமியை கரூர் ராமாகவுண்டனூரைச் சேர்ந்த டிரைவர் மயில்ராஜ் (வயது 23) நல்லம்பட்டியில் உள்ள பிள்ளையார் கோவிலில் வைத்து திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்துவந்ததாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரூபி வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். மயில்ராஜ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு காவல் வைக்கப்பட்டார்.
இதே போன்று கரூர் மாவட்டம் கடவூர் சமூகநல அலுவலர் மாரியம்மாள் அணைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, கடவூர் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். அவரை குளக்காரன்பட்டியைச் சேர்ந்த டிரைவர் கார்த்திக் (வயது 25) என்பவர் கடத்தி சென்று திருமணம் செய்து பலமுறை உடலுறவு வைத்து கொண்டதாக அந்த புகாரில் கூறியுள்ளார். இதனையடுத்து கார்த்திக்கை போலீசார் போக்ஸோவில் கைது செய்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…